பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 161 1067. ரத்தம் ஒழுகி அழுகிப்போகும் (அவல குடிலை துன்பத்துக்கு ன குடிசை (இந்த உடலை) இனிமையாகப் பேசும் புகலாலே - சொற்கள் கொண்டு (குலவி) நெருங்கி உறவாடி இனிய புணர்ச்சியின்பம் தரும் மகளிருடைய கொடிதானதும் கடுமையானதுமான கண்ணாலும்' (கருதும்) (கலவியே ஞாபகமாக) எண்ணுகின்ற எனது (விரகம்) காம இச்சை எல்லாவற்றையும் . மறலி என்னுடன் போர்க்கு எழும் யமன் அழிப்பதற்கு முன்பாக பொன் மயிலின்மேல் (உனது அழகு பொலிந் தொழுக அல்லது மயிலின் அழகு பொலிய (நீ) கருணை வைத்து வந்தருள வேண்டும்; ಳ್ದಿ சுழற்சி (கலுக்கம்) அடையும்படி யிருந்த கிரவுஞ்ச மலை பிளவு படச் செலுத்தின தொழிலமைந்த வேலன்ே சங்கங்கள் உள்ள (உததி அதனில்) கடலிலே (அசுரர் பதியை) அசுரர்களின் தலைவனாம் சூரனை (முடுக வரும்) ஒட்டி விெருட்ட் வந்த வீரனே! ரதி தேவியின் கணவனாம் மன்மதனை எரித்தருளிய இறைவர் (சிவனது) குமாரனே! முருகனே! விளங்கும் தாமரையன்ன திருமுகமும், அதன் அழகும் - எழுதுதற்கு (அரிதான) முடியாதவையான் பெருமாளே! (வரவேணும்) 1068. துன்பமெல்லாம் ஒழியும், உனது தரித்திரமும் நீங்கும், சொல்லப்படுகின்ற அமுதம்ாகிய தேவர் (ப்ருகும்) உணவும், (சுரபி) காமதேனுவும், (குளிகை) உலோகங்களைப் பொன்னாகவல்ல மந்திர சக்தியுள்ள மாத்திரைகளையும் (எளி து பெறுக சுலபமாக நீ பெற முடியு ம் (துவளும்) வாடுகின் எம்முடைய பசி அடங்கும்படியாக " நின் தொன்மை நீங்கி நீள் மலையாகி சண்டே நின்று. செவ்வேள் வேற்படை தன்னிற் பின்னாள் விளிகுதி விரைவின் என்றான்". கந்தபுரா. 2-24.11, 12 1 சூரனைக் கடலில் ஒட்டியது - பாடல் 10னஅடி 7.8 பார்க்க # மன்மதனை எரித்தது - பாடல் 399-பக்கம் 510 குறிப்பு.