பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/629

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது திருப்புகழ் உரை 621 பொரு - பொருந்திய, கை - கையில், சரி - வளையல்களை, வரி ஒழுங்கு நிரை - அல்லது (நீளம்) பெருக - நிரம்ப - (வளையல்கள் கை நிறையச் (செறிவுறு) நெருங்கியுள்ள குறமகள், புனம் - தினைப்புனத்தில் இருந்த மெய் உண்மை நிறைந்த குறமகள் வள்ளியின் மணவாளனே! பழைய நல்ல சரவணம் அதனில் - சரவணத்தில் - சததள முளரி நூற்றிதழ்த் தாமரையாகிய பதிதனில் - உறைவிடத்தில் வீற்றிருப்பவனே (அல்லது - சரவணம் அதனில் - சரவணத்திலும், சததளம் - நூறு இதழ்களைக்கொண்ட முளரி (தாமரை)ப் பதி. ஊரிலும் பொற்றாமரைப் பதியாகிய மதுரையிலும் உறைபவனே! பழைய கடலிடத்தே நெருங்கியிருந்த அசுர சேனை கெட்டு அழிய விரைவிற் சென்று சண்டை செய்ய வல்ல பெருமாளே. (குரவலர் தரவேணும்) 1268. மதிதனை இலாத அறிவு இல்லாத பாவி, குரு சொன்ன நெறியில் நிற்காத கோபி - சினமுள்ளவன், மனம் ஒரு நிலையில் நிற்காத பேயனையவன், பொல்லாத பயனற்ற மாயை, பொய்யான போக்குகளை விடாத பேடி, ஆண்மை அற்றவன், தவம் என்னும் நினைப்பே இல்லாத (மோடி) (வனக்) காளி அனையவன், (வரும் வகை இதேது க்ாயம்) காயம் வரும்வகை இதேது - இந்த உடல் பிறப்பு வந்த வகை இது எப்படி - என்று ஆயும் விதி - பாக்கியம் இல்லாத பொல்லாத லோபி - குறையை உடையவன், சபைகளுக்கு வராத சபைகளில் வந்து பேசும் மனத்திடம் இல்லாதவன், வினையின் வலிமையை விடாத - நீக்க மாட்டாத (கூளன்) பயனிலி-ஆகிய என்னை நீயும் மிகு பரமதான - மிக சிரேஷ்டமான மேலான - §. விசாரமாக ஆராய்ச்சி செய்ய, மிகும் - மிக்கு ளங்கும் உன்னுடைய ரூபதானம் ரூப பரிசை - சாரூப்ம் என்னும் நன்கொடையை அடியேனுக்குத் தந்தருளுக எதிர்த்து வந்த (உதார சூரன்) மேம்பாடு உடைய சூரன் இரண்டு பிளவாகும்படி வேலாயுதத் ( Gణ7@) தகுதியுடன் தக்க முறையில் செலுத்தின திரனே! 巧 / "ஈறற்ற சொற் சுக சொரூபத்தையுற்றடைவேனோ. திருப்புகழ் 425 உனை உணர்ந்தொரு மவுன பஞ்சரம் பயில்தருஞ் சுகபதம் அடைந்து அருள்பொருந்தும தொருநாளே திருப்புகழ் 1151. இருவோர் ஒரு ரூபமதாய். இறையோனிடமாய் விளையாடுகவே இயல்வேலுடன்மா அருள்வாயே - திருப்புகழ் 563.