கந்தரந்தாதி 239 நித்திலம்-முத்து விளைகின்ற, சலராசி-சமுத்திரமும், கா-சோலையும், அலவன்-சந்திரனும், பரியங்கம் கட்டிலும், குழல் புல்லாங் குழலும், பெற்ற - என்னைப் பெற்றவளாகிய, தே மொழி - இனிய மொழியையுடைய, வஞ்சி - தாயின், காவு காவலும், அல இவைகளெல்லாம் பெரிதல்ல, வன் - வலிய, பரியானலம் - வடவாமுகாக்கினி போன்று வருத்துகின்றன, அன்றிலும் (காமசின்னமாகிய) அன்றிற்பட்சியும், தென்றலும் (தேராகிய தென்றற் காற்றும் (எ று) அன்றிலும் தென்றலும் எழுவாய் பரியானலம் பயனிலைஏ-அசை (க-உ) மயில்வாகனனே! அன்பர்க்கருளும் வேலாயுதனே! இலஞ்சிப்பதியோனே! எனக்குப் பகைவராகிய ஊராராலும், காமனாலும், கடலாலும், சோலையினாலும் கட்டிலினாலும், வேய்ங்குழலாலும், தாயின் காவலாலும் உண்டாகும் இடர் பெரிதல்ல; அன்றிலும் தென்றலுமே வடவாமுகாக்கினி போன்றிருக்கின்றன; ஆகையால் எனக்குஅருள்செய்ய இதுசமயம் (கு-உ () விரகதாபம் கொண்டாரை வருத்துவன - ஊரார் வசைப்பேச்சு, மன்மதன், கடல், பொழில், திங்கள், கட்டில், புல்லாங்குழல், பெற்ற தாயின் காவல், அன்றில், தென்றல் அந்தாதி செய்யுள் 7,9,35,40,70பார்க்க (2) இலஞ்சி - திருப்புகழ் பெற்ற தலம் இருப்பிடம் முதலியன திருப்புகழ்975 பக்கம் 820 தலைக்குறிப்பிற் காண்க. அந்தாதி செய்யுள் 13 பார்க்க - (3) பரியானலம் - பரி - குதிரை. அனலம் - நெருப்பு. வடவாமுகாக்கினி - பெண் குதிரை முகத்தின் வடிவோடு கடற்குள் தங்கியிருந்து யுகாந்தத்தில் மேலே கிளம்பி உலகத்தை எரித்து விடுவதாகக் கருதப்படும் தீ - வடவை - பெண்குதிரை (பிங்கலம்) தக்கயாக உரை475 82. காம மிக்க கழிபடர் கிளவி தென் றலை யம்பு புனைவார் குமார திமிரமுந்நீர்த் தென்றலை யம்புய மின்கோ மருக செழுமறைதேர் தென்றலை யம்பு சகபூ தரவெரி சிந்திமன்றல் தென்றலை யம்பு படுநெறி போயுயிர் தீர்க்கின்றதே.
பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/246
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை