பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை திருத்தணிகேசர் திருவருள் துணை கொண்டு எங்கள் பாட்டனார் உயர்திரு வ.த. சுப்பிரமணிய பிள்ளை அவர்கள் பல இடங்களினின்றும் சேகரித்த ஒலைச் சுவடிகளிலிருந்து திருப்புகழ்ப் பாக்களை யாவரும் பாடி வணங்குவதற்கு முதன் முதலாக நூல் வடிவில் மூன்று பாகங்களாக அச்சேற்றிச் திருமுருகனுக்குத் தொண்டாற்றினார். வாழையடி வாழையென வந்த திருக்கூட்ட மரபினில் யான் ஒருவன் அன்றோ என்ற வள்ளற் பெருமானின் வாக்கிற்கொப்ப எங்கள் தந்தையார் தணிகைமணி டாக்டர் வ.சு.செ. அவர்கள் அருணகிரிநாதர் அருளிச் செய்த திருப்புகழ்ப் பாக்களிலும் பிறவற்றிலும் திளைத்து, பக்தியில் ஆழ்ந்து இன்புற்று, பல வகையான ஆராய்ச்சிகளைச் செய்து தணிகை எம்பெருமானை வணங்கினார்கள். சைவத் திருமுறைகள் பன்னிரண்டு உள்ளவற்றைப் போல முருகப் பெருமானுக்கும் திருப்புகழ் முதலாய நூல்களை முருகவேள் பன்னிரு திருமுறை என வகுத்து ஆராய்ச்சி உரையுடன் தொகுத்து வெளியிட்டு மகிழ்ந்தனர். இவற்றின் முதல் பதிப்பு திருநிறை மீனாட்சி கல்யாணசுந்தரம் அவர்களால் 1952 -1957 ஆம் ஆண்டுகளில் வெளியிடப்பட்டது. சில தொகுதிகளின் இரண்டாம் பதிப்பு சைவ சித்தாந்த நூற் பதிப்புக் கழகத்தாரால் 1965-ல் வெளியிடப்பட்டது. பின்னர் முருக பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்கிப் பல்லாண்டுகளாகக் கிடைக்காதிருந்த இத்தொகுதிகளை மீண்டும் பதிப்பிக்கத் திட்டமிட்டோம். முருகவேள் பன்னிரு திருமுறை எனச் சுமார் 4300 பக்கங்களில் ஆறுதொகுதிகளாக இதுவரை இருந்தவற்றை இம்மூன்றாம் பதிப்பில், முதல் இரு தொகுதிகளை ஒன்றாகச் சேர்த்து முருகவேள் பன்னிரு திருமுறை பாகம் ஒன்று என்றும் மூன்று நான்கு தொகுதிகளை ஒன்று சேர்த்துப் பாகம் இரண்டு என்றும் ஐந்தாம் தொகுதியைப் பாகம்