பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரம் 73 (இபா உ) (அரா) பாம்பினை (புனை) அணிந்துள்ள (வேணியன்) சடைப் (பெருமானது) (சேய்) குழந்தையாகிய முருகவேளின் திருவருள் வேண்டும், (அவிழ்ந்த நான் எனும் அகந்தை அற்ற (தன்னை) இழந்த நிலையான அன்புடனே ( வேளின்) . குராமலர் அணிந்துள்ள தண்டை விளங்கும். அழகிய ருவடிகளைத் தொழுதல் வேண்டும் பொல்லாத (மெய், வாய், கண், மூக்கு செவி என்னும்) ஐம்பொறிகளால் ஏற்படும் (பராக்கு ப்ராமுகம் . குறிக்கோள்ை விட்டும் பல வீண் விஷயங்களிற் பொழுது கழித்தல் என்பது முற்றும் நீங்கவேண்டும், மனத்தின் வேகக் }ಕೆ, தணிந்து ஒழியவேண்டும் (என்றால்) . இவ்வளவு இலக்கணங்களும் ருக்கவேண்டும் என்றால், இரவும் பகலும் இல்லாத (கடந்த) இருத்தல் எளிதன்று-(என்பது பெறப்படும்) (சு உ) இராப்பகல் அற்ற இருத்தற்கு மனமும் புலனும் ஒடுங்கி, அன்புடனே முருகன் திருவருள் பெற்று அவனைத் தொழுதல் வேண்டும். (கு உ) அரா = அரவு: பாம்பு. குரா = குரவு கேவல சகலங்க ளற்ற அருள் நிலை. "இரவ பகலற்றவிட மெனதற விருக்கைபுரி யோகப் புராதனனும்" - திருவகுப்பு 12. "இரவும் பகலும் - இரவு தத்துவங்களின் தொழிற்பாடின்றி ஆணவ மல்த்தோடுட் மாத்திரம் கூடியிருக்கும் | கேவல நிலை. பகல் - ஆன்ம தத்துவங்களோடு கூடி ஷயங்களை நுகரும் சகலநிலை" . ஆசிரியர் திருவிளங்கம் அவர்களின் குறிப்பு இரவு பகலில்லா இடத்தில்தான் இன்பவெளியைக் காணலாம் பாடல் 73ன் குறிப்பும் பார்க்க "இரவு பக லில்லா இன்ப வெளியூடே விரவி விரவிநின் றுந்தீபற - திருவுந்தியார் 20 மனம் பதைப்பறல் வேண்டும் - "உள்ளம் அடங்கியதில்லை; உள்ளம் அடங்குறின் அல்லால் தெள்ளரிய சிவஞானம் சிவணாது" - கைப் புராணம்-இராமன் அருள் பெறு படலம் 42 75. நெஞ்சொடு கிளத்தல் படிக்கின் றிலைபழ நித்திரு நாமம் படிப்பவர்தாள் முடிக்கின் றிலைமுரு காவென் கிலை2முசி யாமலிட்டு மிேடிக்கின் றிலைபர மாநந்த மேற்கொள 4விம்மிவிம்மி நடிக்கின் றிலைநெஞ்ச மேதஞ்ச மேது நமக்கினியே. (அந்) நெஞ்சமே படிக்கின்றலை. நடிக்கின்றலை. நமக்கு இனித் தஞ்சம் ஏது?