பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/854

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30. கந்தர் கலிவெண்பா புன்முறுவல் பூத்தலர்ந்த பூங்குமுதச் செவ்வாயும் சென்மவிடாய் தீர்க்கும் திருமொழியும் - வின்மலிதோள் வெவ்வசுரர் போற்றிசைக்கும் வெஞ்சூர னைத்தடிந்து தெவ்வருயிர் சிந்தும் திருமுகமும் எவ்வுயிர்க்கும் ஊழ்வினையை மாற்றி உலவாத பேரின்ப வாழ்வுதரும் செய்ய மலர்முகமும் - சூழ்வோர் வடிக்கும் பழமறைகள் ஆகமங்கள் யாவும் முடிக்குங் கமல முகமும் - விடுத்தகலாப் பாச இருள் துரந்து பல்கதிரிற் சோதிவிடும் வாச மலர்வதன மண்டலமும் நேசமுடன் போகமுறும் வள்ளிக்கும் புத்தேளிர் பூங்கொடிக்கும் மோகம் அளிக்கும் முகமதியும் - தாகமுடன் வந்தடியிற் சேர்ந்தோர் மகிழ வரம்பலவும் தந்தருளுந் தெய்வமுகத் தாமரையும் கொந்தவிழ்ந்த வேரிக் கடம்பும் விரைக்குரவும் பூத்தலர்ந்த பாரப் புயசயிலம் பன்னிரண்டும் ஆரமுதம் தேவர்க் குதவுந் திருக்கரமும் சூர்மகளிர் மேவக் குழைந்தணைந்த மென்கரமும் - ஒவாது மாரி பொழிந்த மலர்க்கரமும் பூந்தொடையல் சேர அணிந்த திருக்கரமும் - மார்பகத்தில் வைத்த கரதலமும் வாமமருங் கிற்கரமும் உய்த்த குறங்கில் ஒருகரமும் - மொய்த்த சிறுதொடிசேர் கையுமணி சேர்ந்ததடங் கையும் கறுவுசமர் அங்குசஞ்சேர் கையும் - தெறுபோர் அதிர்கே டகஞ்சுழற்றம் அங்கைத் தலமும் கதிர்வாள் விதிர்க்குங் கரமும் . முதிராத கும்பமுலைச் செவ்வாய்க் கொடியிடையார் வேட்டணைந்த அம்பொன் மணிப்பூண் அகன்மார்பும் - பைம்பொற் புரிநூலும் கண்டிகையும் பூம்பட் டுடையும் அரைஞானும் கச்சை அழகும் - திருவரையும் நாதக் கழலும் நகுமணிப்பொற் கிண்கிணியும் பாதத் தணிந்த பரிபுரமும் - சோதி இளம்பருதி நூறா யிரங்கோடி போல வளந்தருதெய் வீக வடிவும் உளந்தணிற்கண் டாதரிப்போர்க் காருயிராய் அன்ப்ரகத் தாமரையின் மீதிருக்கும் தெய்வ விளக்கொளியே ஒதியஐந் 847 41 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 57 58