பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/856

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30. கந்தர் கலிவெண்பா திருமுகங்கள் ஆறாகிச் செந்தழற்கண் ஆறும் ஒருமுகமாய்த் தீப்பொறிஆ றுய்ப்ப விரிபுவனம் எங்கும் பரக்க இமையோர்கண் டஞ்சுதலும் பொங்குந் தழற்பிழம்பைப் பொற்கரத்தால் . அங்கண் எடுத்தமைத்து வாயுவைக்கொண் டேகுதியென்றெம்மான் கொடுத்தளிப்ப மெல்லக் கொடுப்போய் . அடுத்ததொரு பூதத் தலைவகொடு போதியெனத் தீக்கடவுள் சீதப் பகீரதிக்கே சென்றுய்ப்பப் போதொருசற் றன்னவளுங் கொண்டமைதற் காற்றாள் சரவணத்திற் சென்னியிற்கொண் டுய்ப்பத் திருவுருவாய் - முன்னர் அறுமீன் முலையுண் டழுதுவிளை யாடி நறுநீர் முடிக்கனிந்த நாதன் - குறுமுறுவற் கன்னியொடும் சென் றவட்குக் காதலுருக் காட்டுதலும் அன்னவள்கண் டவ்வுருவம் ஆறினையும் . தன்னிரண்டு கையால் எடுத்தனைத்துக் கந்தனெனப் பேர்புனைந்து மெய்யாறும் ஒன்றாக மேவுவித்துச் செய்ய முகத்தில் அனைத்துச்சி மோந்து முலைப்பால் அகத்துண் மகிழ்பூத் தளித்துச் சகத்தளந்த வெள்ளை விடைமேல் விமலன் கரத்திலளித் துள்ளம் உவப்ப உயர்ந்தோனே - கிள்ளைமொழி மங்கை சிலம்பின் மணிஒன் பதிற்றோன்றும் துங்க மடவார் துயர்தீர்ந்து - தங்கள் விருப்பால் அளித்தநவ வீரருக்குள் முன்னோள் மருப்பாயுந் தார்வீர வாகு - நெருப்பிலுதித் தங்கட் புவனம் அனைத்தும் அழித்துலவும் செங்கட் கிடாயதனைச் சென்றுகொணர்ந் . தெங்கோன் விடுக்குதினன் றுய்ப்பஅதன் மீதிவர்ந்தெண் திக்கும் நடத்தி விளையாடு நாதா படைப்போன் அகந்தை உரைப்பமறை ஆதி எழுத்தென் றுகந்த பிரணவத்தின் உண்மை - புகன்றிலையால் சிட்டித் தொழிலதனைச் செய்வதெங்யன் என்றுமுனம் குட்டிச் சிறைஇருத்துங் கோமானே! - மட்டவிழும் பொன்னங் கடுக்கைப் புரிசடையோன் போற்றிசைப்ப முன்னம் பிரம மொழிந்தோனே - கொன்னெடுவேல் தாரகனும் மாயத் தடங்கிரியும் தூளாக வீர வடிவேல் விடுத்தோனே - சீரலைவாய்த் 849 77 78 79 81 82 83 85 87 89 91 92 93