பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/965

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

958 முருகவேள் திருமுறை (12-திருமுறை நன்றி, பாராட்டு பன்னிரண்டு திருமுறைகள் எழுதிஅச்சில் ஏற்றிப் பண்புடனே முடிவளவும் எனக்குதவிக் காத்த பன்னிரண்டு விழிக்கருணைப் பரமனவன் அருளைப் பரவியுளங் களிகூர்ந்து நினைக்கும்போ தெல்லாம் என்னிரண்டு கண்மணியே என்னுயிரே அன்பே என்பொன்னே என்மணியே எனப்போற்றி ஐயன் தன்னிரண்டு பாதமலர் தலைக்கணியாக் கொண்டு தமியனா னந்தமலி இன்பமுறு வேனே. வாழ்த்து வாழ்கநந் தணிகை வள்ளல் வாழ்கநற் றொழில்க ளெல்லாம் வாழ்கஇப் பன்னி ரண்டு மகாமுறை அச்சி லேற்றி மாழ்குதல் இரா தளித்த மாண்பார்கல் யாண சுந்த்ரர் வாழ்கமற் றவர்இல் லாளும் வாழ்கசி ரடியா ரெல்லாம். முருகவேள் பன்னிரு திருமுறைகள் முற்றிற்று.