பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நம்பி: அப்படி யென்றால் ஊரிலுள்ள பெரிய மனிதர்களுள் முக்கால் வாசிப் பேர் தூக்கு மேடை ஏற வேண்டியிருக்கும். மேகலை: என்ன தோகை: சோகமே உருவாய்? மேகலை: விம்பில்டன் டென்னிஸ் போட்டியில் போரிஸ் பெக்கர் தோற்றுப் போய் விட்டார் மேகலை: அதற்காக... தோகை: அத்தோல்வியை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. நான் அவர் விசிறி, குப்பை வண்டி கவிழலாம்: குன்றம் கவிழலாமா? மேகலை: போரிஸ் பெக்கர் தோற்றால் என்ன? ஸ்டெஃபி கிராஃப்தான் வென்று விட்டாளே! பெண்கள் - பெருமிதப் பட வேண்டிய செய்தி. சொற்கோ: தோகை! நீ ஒரு முட்டாள்! முருகுசுந்தரம் கவிதைகள் 97