பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏன்? சொற்கோ: அப்புள்ளி - ஒரு தீராத நோயின் தொடக்கமென்று அவர் கருதியது தான் காரணம். தோகை: பிறகு என்ன நடந்தது? சொற்கோ: பிறகு - சிறந்த மருத்துவரிடம் காட்டிய போது அது தோலின் நிறமாற்றமே தவிர நோயல்ல என்று கூறிவிட்டார், அதன் பிறகு ஆனந்தன் எவ்வளவோ கெஞ்சிக் கேட்டும் அவரை ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டார் மேகலை. அதன் பிறகு - திருமணத்தைப் பற்றிப் பேசினால் மேகலை குமுறும் எரிமலையாகி விடுவார்; கொந்தளிக்கும் கடலாகி விடுவார். இப்போது புரிகிறதா மேகலை பெண்ணுரிமை பற்றி இவ்வளவு தீவிரமாக இருப்பதற்குக் காரணம்? கவிஞர் முருகுசுந்தரம் 104