பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எங்கள் குருதியில் குளித்துச் சிவந்த மண்... அதைச் சிங்களவருக்கு விட்டுக் கொடுக்கமாட்டோம் நம்பி: சிங்களவரும் அப்படித்தான் சொல்கிறார்கள். வீணா: அது பொய்! இலங்கையின் ஆதிகுடிகள் தமிழர்களே! 2500 ஆண்டுகளுக்கு முன் விசயனும்அவன் கூட்டாளிகளும் வடக்கிருந்து வந்து இலங்கை மண்ணைப் பங்கு போட்டுக் கொண்டனர். ஈழத்துப் பூதன் தேவன் கடைச் சங்கப் புலவன் ஆயிரம் போர்க்கப்பல்களைத் தன் கண்வலையால் கட்டியிழுத்த ஹெலனின் நாட்டைச் சோந்த தாலமி ஆயிரத்து எண்ணுாறு ஆண்டுகளுக்கு முன்பே தன் உலக வரைபடத்தில் ஈழத் தமிழரின் வாழ்விடங்களைத் தமிழ்ப் பெயரால் சுட்டிக் காட்டியிருக்கிறான், முருகுசுந்தரம் கவிதைகள் 115