பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்னை எரிக்கும் தீயாக நானே மாறி விடுவேன் வேறு ஏதாவது பேசுங்ககள். நம்பி; உன்னிடம் காதலைப் பற்றியும் பேச முடியாது. வீணா: ஏன் ? (நாணிச் சிரிக்கிறாள்) நம்பி; அருவிக் கரையில் இருப்பவர்க்கு அதன் - குளிர்ச்சி எப்படிப் புரியும்? அதில் ஆடினால் தான்... வீணா: என் வாழ்க்கை ஒரு கொதிக்கும் பாலைவனம் உங்கள் . நினைவுவரும் போது மட்டும் ஒர் ஒயாசிஸில் நுழைந்து வெளி வரும் சுகம் எனக்கு ஏற்படுவதுண்டு. ஆனால் அந்தச் சுகமும் ஒடும் புகை வண்டியின் எதிரே வரும் கம்பத்தைப் போல் வேகமாக மறைந்து விடுகிறது. முருகுசுந்தரம் கவிதைகள் 盘鱼了