பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உங்களுக்கு என்ன வேண்டும்? துஷ்யந்தன்: நான்... சிறுவன்: அதிதியா? ஆசிரமத்தில் அன்னை இருக்கிறார், செல்லுங்கள், உங்களை வரவேற்று உபசரிப்பார். துஷ்யந்தன்: நீ. சிறுவன்: நான்... விளையாட வெண்டும்; துஷ்யந்தன்: சரி தம்பி! உன் பெயர்! சிறுவன்: பரதன் துஷ்யந்தன்: உன் தந்தை... சிறுவன்: துஷ்யந்தன்! அஸ்தினாபுரத்தின் அரசர்! துஷ்யந்தன். (தனக்குள்) இச்சிங்கக் குட்டியா என் மகன்! இந்த வீர வித்தா என் குலக் கொழுந்து! கவிஞர் முருகுசுந்தரம் 134