பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோகை: மாணவர்கள் போராட்டம்! மாணவர்கள்: ஓங்குக! வஞ்சி: நிறைவேற்று நிறைவேற்று! மாணவர்கள்: மாணவர்கள் கோரிக்கைகளை நிறைவேற்று! (மூத்த பேராசிரியர் இருவர் மாணவர் போராட்டம் நடக்கும் இடத்தை நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர்) இந்திரஜித்: டேய் சொற்கோ! தஞ்சைப் பெருவுடையாரும் 'செகண்ட் இட் சீனிவாசனும் வருகிறார்கள். (கணக்குப் பேராசிரியர் கனகசபை தஞ்சாவூர்க் காரர்; இரட்டை நாடி உடம்புடையவர், அவருக்கு மாணவர்கள் வைத்த பெயர் தஞ்சைப் பெருவுடையார். ஆங்கிலப் பேராசிரியர் சீனிவாசன் பல்கலைக்கழக ஆட்சிக் குழுவில், துணைவேந்தர் ஏதேனும் தீர்மானம்கொண்டுவந்தால், உடனே எழுந்து l Second it'என்று கூறுவார். அதனால் மாணவர்கள் அவருக்கு 'செகண்ட் இட் சீனிவாசன் என்று நாமகரணம் செய்திருந்தனர்.) ß6Øī $&#68) LI: தம்பி சொற்கோ! துணை வேந்தர் கூப்பிடுகிறார்! போகலாம் வா! சொற்கோ: ஏன்? எதற்கு; முருகுசுந்தரம் கவிதைகள் 169