பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சீனிவாசன்: என்ன குறையிருந்தாலும் பேசித் தீர்த்துக் கொள்ளலாம். போராட்டம் எதற்கு? சொற்கோ: எங்கள் கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்ட பிறகுதான் பேச்சு வார்த்தை! 556ö「55F6cm)L」: இது என்னப்பா பிடிவாதம்? பேச்சுவார்த்தை நடத்தாமல் கோரிக்கைகளை எப்படித் தீர்ப்பது? சொற்கோ: கோரிக்கைகளைத் தெளிவாக எழுதி ஒட்டியிருக்கிறோம். சீனிவாசன்: பயித்தியம் தீர்ந்த பிறகுதான் திருமணம்! திருமணம் முடிந்தால்தான் பயித்தியம் தீரும் என்ற கதையாக வல்லவா இருக்கிறது? இதுதான்உங்கள் முடிவா? சொற்கோ: ஆமாம் ஐயா! இதில் மாற்றமில்லை (பேராசிரியர் இருவரும் வருத்தத்தோடு திரும்புகின்றனர். அப்போது தமிழ்ப் பேராசிரியை தமயந்தி வருகிறார்.) கவிஞர் முருகுசுந்தரம் 17O