பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சீனிவாசன்: மாணவர்கள் போராட்டத்தை விட்டுக் கொடுப்பதாகத் தெரிய வில்லை. துணை வேந்தர்: இதுஒரு விதமான கைகேயித்தனம். சில பெண்கள். கணவனை நேரடியாக எதிர்க்க முடியாமல் தலையை விரித்துப் போட்டுக்கொண்டு குப்புறப்படுத்துக் கொள்வதில்லையா? அது போலத்தான் இதுவும். சீனிவாசன்: சரியாகச் சொன்னிர்கள். துணைவேந்தர்: பின் என்ன? நம்மால் அடக்கப்பட்டும் தண்டிக்கப்பட்டும் தேர்வுச் சமயங்களில் கட்டுப்பாட்டுக்கு உட்படுத்தப்பட்டும் துன்புறும் மாணவர்கள் நம்மைநேரடியாக எதிர்க்க முடியாமல், கோரிக்கை என்னும் போர்வைக்குள் புகுந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள் சீனிவாசன்: உண்மைதான் கவிஞர் முருகுசுந்தரம் 176