பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறியலை மீறி உள்ளே சென்றிருக்கக்கூடாது. நம்பி; ஏன்? வீணா: அதனால் தானே உங்களுக்கு இத்தகைய ஆபத்து நேர்ந்தது நம்பி: கூரிய முட்கள் குத்துமென்பதற்காக ரோஜாவைப் பறிக்காமல் இருக்க முடியாது. சுறா மீனுக்குப் பயந்தால் முத்தெடுப்ப தெவ்வாறு? வீணா: ஆபத்தான உவமைகள் நம்பி: அமைதியான உங்கள் போராட்டம் ஆர்ப்பாட்டமாக மாறிப் பின்னர் வன்முறையாக வெடிக்குமென்று நான்எதிர்பார்க்கவில்லை. விணா: நெருப் பில்லாமல் வேள்வியா? வன்முறையில்லாமல் போராட்டமா? முருகுசுந்தரம் கவிதைகள் 185