பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமெரிக்காவில் உள்ள செவ்விந்திய இனம் தான். தமிழர்களின் இயல்பான நிறம் மாநிறம் நம்பி: அதாவதுமாந்தளிர் நிறம் நெடுமுடி: ஆமாம்! ஆனால் உன் அண்ணி பொன்நிறம் நம்பி: அப்படியென்றால் அண்ணி... நெடுமுடி: தமிழ்ப்பெண் இல்லை நம்பி: என்ன அண்ணா? புதிர் போடுகிறீர்கள்? நெடுமுடி: அவள் ஒரு பஞ்சாபிப் பெண் நம்பி: உண்மையாகவா? அண்ணா! நான் உடனே அண்ணியைப் பார்க்க வேண்டும் நெடுமுடி: அவசரப்படாதே! நான்வந்தவேலை முடியட்டும் நாளை அதிகாலையில் கவிஞர் முருகுசுந்தரம் 200