பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/212

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நம்பி: நிலவு வரட்டும் என்று இந்தக் குமுதம் கண்ணைமூடிக் கொண்டிருக்கிறது. வீணா: என்ன? கவிதையில் பேசுகிறீர்! நம்பி: இல்லை! பெண் தமிழில் பேசுகிறேன். வீணா: என்ன? பெண் தமிழா? நம்பி: ஆமாம்! தமிழில் பெண்மை மிகுந்திருக்கும் போது கவிதையாகிறது. வீணா: நல்ல விளக்கம். நம்பி: இன்று காலை எங்கு சென்றிருந்தாய்? கல்லூரியில் காணவில்லை; விடுதியிலும் காணவில்லை, (iணா நம்பியின் முகத்தைக் கூர்ந்து பார்க்கிறாள்.) வீணா: இன்று காலைஎன் தோழி ஒருத்திக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அந் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளச் கவிஞர் முருகுசுந்தரம் 2O6