பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/217

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பார்த்துக் கொண்டிருப்பது? (நம்பி வெட்கத்தோடு சிரிக்கிறான்) நம்பி: வீணாவை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. நிலவுமேல்மாடிக்கு மிக அருகில் இருப்பதாகத் தோன்றும் மேலே ஏறிச் சென்றால் கைக்கெட்டாத உயரத்தில் சென்றுவிடும், அவளும்அப்படித்தான் என்னிடம் பழகிக்கொண்டிருந்தாள். ஆனால்... சென்றமுறை... மேகலை: உ.ம்... நம்பி: நான் அவளைச் சந்தித்த போது அவளிடத்தில் ஒரு புதிய மாற்றம் தென்பட்டது, மேகலை: என்ன? நம்பி: தெளிவாக இருந்த வானம் திடீரென்று கறுத்துக் முருகுசுந்தரம் கவிதைகள் 21, 1