பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/218

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோடை மழை பொழிவதுபோல் எதிர்பாராமல் அன்பைப் பொழிந்தாள். என்னோடு அவள் வாழ்க்கையைப் பிணைத்துக் கொள்ள விரும்பினாள். ஆனால், 'திருமணம் என்ற சடங்கு தேவையில்லை, என்றாள். அவள் பேச்சிலும் செயலிலும் ஒர் பதற்றம்... துடிப்பு... அவசரம்: அவளை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. மேகலை: அவளைக் கடைசியாகச் சந்தித்து எத்தனை நாட்களிருக்கும்? நம்பி: ஒரு வாரமாகிறது. மீண்டும் அவள் என் கண்ணில் படவில்லை. அவளுடைய தோழியர்களை விசாரித்தேன். யாழ்ப்பாணத்திலிருந்து கவிஞர் முருகுசுந்தரம் 212