வந்திருக்கும் அவளுடைய உறவினர் ஒருவரைக் காணச் சென்னை சென்றிருப்பதாகச் சொன்னார்கள். (அப்போது வானொலியில் மாநிலச்செய்தி ஒலிபரப்பாகிறது. - இருவரும் பேச்சை நிறுத்திவிட்டுச் செய்தி கேட்கின்றனர்.) செய்தி சென்னையில் நடைபெறும் கிழக்காசிய நாடுகளின் கலாச்சார விழாவில் பங்கு கொள்ள வந்த இலங்கை அமைச்சர் திலகரத்னே நேற்று இரவு ஒன்பது மணிக்கு ஒரு வெடிகுண்டு விபத்தில் இறந்தார். அவருடைய பாதுகாவலர் நால்வரும் கொல்லப்பட்டனர். பதினைந்து பேர் கடுமையாகக் காயமடைந்து அரசாங்கத் தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேகலை: கொடுமை கொடுமை! ஆண்டவனே! இந்த வெடிகுண்டுக் கலாச் சாரத்துக்கு முடிவே கிடையாதா. நம்பி: ஆண்டவனைப் போல் அங்கிங் கெனாதபடி அது எங்கும் பரவியிருக்கிறது. மேகலை: இலங்கைப் போராளிக் குழுக்களின் வேலைதான்! சொந்த நாட்டில் அவர்கள் எப்படி வேண்டுமானாலும் முருகுசுந்தரம் கவிதைகள் 213
பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/219
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை