பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/222

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கன்னட சங்கத்தார். தடை வாங்கி விட்டனர். உலகத்திற்கே பொதுவான வள்ளுவன் மொழிவெறியால் ஒதுக்கப் படுகிறான். சாதி மொழி மதம் எல்லாவற்றையும் கடந்த காதலால் ஒன்றுபட்டிருக்கும் நீங்களும் அம்ரிதாவும் இனி உருவாக விருக்கும் புதிய சமுதாயத்தின் விடி வெள்ளிகள்! இந்திய நாட்டின் அரசியல் போக்கையே மாற்றியமைக்கும் அளவுக்குச் சாதிச்சங்கங்களும் சமய மொழிச்சங்கங்களும் வலுப் பெற்றிருக்கும் இந்த நாளில் உங்கள் திருமணம் பெரிய புரட்சி நெடுமுடி: அரும்பு மொட்டாவதும் மொட்டு மலராவதும் எப்படி இயல்பான நிகழ்ச்சியோ அது போல்எங்கள் காதலும் மணமும் இயல் பானவை. இதில் கவிஞர் முருகுசுந்தரம் 216