பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/250

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணிர்த் தவங்கள் கடைப்பிடித்து நான்வளர்த்த பன்னீர் வரங்களைப் பறித்தெடுத்துச் சென்றவரார்? அரும்பி மலராத ஆசையை எரிப்பதற்கு விரும்பி நான்வளர்த்த வேள்வியை அனைத்தவரார்? பதைப்பு நிலத்தில் பாவை யென்னை எருவாக்கி விதைத்தமலர்த் தோட்டத்தை வெடுக்கென்று பறித்தவரார்? ஒழுகும் என்னிதய ஊற்றுப்புல் லாங்குழலில் வழிகின்ற வேதனை வரிப்பாட்டைத் தடுத்தவரார்? வெப்பு நோய்க்காட்டில் விளைந்த என்னிதயக் கொப்புளப் புதுப்பூக் குடலையைக் கொண்டவரார்? கண்ணிர்த் தவங்கள் கடைப்பிடித்து... கடைப்பிடித்து... (சிரிக்கிறாள்) கவிஞர் முருகுசுந்தரம் 244