பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/309

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமரிமலர் கூடிவிட்டுக் குளிக்காமல் திரிகின்ற வண்டை, அந்திச் சமயத்தில் கதவடைக்கும் சச்சரவுத் தாமரையைப் பாடிப் பாடி அமுதொழுகும் ஆங்கிலத்தை ஐயய்யோ! கறைசெய்தேன்! இரவில் கூம்பாக் குமு தமல ரேஉன்னைக் குளிப்பாட்டு வேன்; இனியென் கவிதை யாற்றில்! எனக்கென்றோர் எதிர்காலம் இவ்வுலகில் இனிமேலே இருக்கு மானால் உனக்கன்றி வேறொருத்திக் கொருநாளும் இடமில்லை உறுதி யாக புனக்கொல்லைப் பந்தலிலே போயேறிக் கொடிமின்னல் படர்வ தில்லை. இனக்கவர்ச்சி இலக்கியமே! இனியொருத்தி மேனியில் நான் படர மாட்டேன். முருகுசுந்தரம் கவிதைகள் 3O3