பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/316

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெள்ளையர் ஆட்சி வீழ வீரத்தைக் காட்டி நின்ற துள்ளுதோள் மறவ ருக்கும் தோள்கொடுத் தாட்சித் தேரைத் தள்ளிடும் நண்பருக்கும் தாங்கரும் மகிழ்ச்சி யோடென் உள்ளத்தில் பொங்கும் நன்றி உணர்ச்சியை வழங்கு கின்றேன். கற்றரைச் சிறைக்கூ டத்தில் கடுந்துயர் மிகவும் பட்டும் ஒற்றிய பிரம்ப டிக்கே உடம்பினைத் தந்து நைந்தும் பற்பல பேரைக் குண்டுப் பாம்புக்குப் பறிகொடுத்தும் பெற்றஇச் சுதந்த ரத்தைப் பேணுதல் கடமை யாகும். சமயத்தைச் சடங்கைப் பொய்மைச் சாத்திரக் கூத்தை யெல்லாம் உமியைப்போல் கருதி யென்றன் உள்ளத்தில் ஒதுக்கி வாழ்ந்தேன். நமையும்ஏ மாற்றிக் கொண்டிந் நாட்டை ஏமாற்று தற்காய்ச் சமைத்தபொய்ச் சடங்கை யென்றன் சாவுக்குச் செய்ய வேண்டாம். கவிஞர் முருகுசுந்தரம் 310