பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவசர அவசரமாய்ப் பூசைக்கு வேண்டிய சமித்தும் தர்ப்பையும் மலரும் சேகரம் செய்துகொண்டு, உடம்போடு ஒட்டிய ஈரப்புடவையின் சரசரப்பு காலைத் தபோவனத்தின் கவனத்தைக் கலைக்க, காயத்ரி மந்திரத்தை முணுமுணுத்த வண்ணம் நடந்து வந்தாள் அகலிகை. காலைக் கடன்களையும் கதிரவன் வணக்கத்தையும் முடித்துக் கொண்டு கமண்டல தாரியாய்ப் பர்ணசாலையின் முகப்பில் திரிவிக்கிரமனைப் போல் நின்ற கெளதமன் முன்னால் மண்டியிட்டு வணங்கினாள். "தீர்க்க சுமங்கலி பவ!' என்று கெளதமன் வாழ்த்த 'என் பாக்கியம் சுவாமி' என்று பணிவோடு சொன்னாள் அகலிகை. ஒமகுண்டம் நாம சங்கீர்த்தனம் அதிதி உபசாரம் ஆன்மீக விசாரம் கந்த மூலம் காய்கனி கிழங்கு... என்று அகல்யாவின் அன்றாட வாழ்க்கை ஒடிக்கொண்டிருந்தது. அத்தி பூத்தாற் போல் ஏதேனும் ஒர் இரவில் கவிஞர் முருகுசுந்தரம் 26