பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/322

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நுரையருவிப் பாட்டெழுதி என்னபயன்? இவனைப்போல் மடமை கண்டால் இரைமீது பாய்ந்துவிழும் இளஞ்சிறுத்தைப் பாட்டெழுத எவனுமில்லை. தரைவைரக் கற்களுக்கும் தழும்புண்டு; கீற்றென்னும் குற்ற முண்டு, நரைதிரைகள் என்பதெல்லாம் நமக்குண்டு; பாவேந்தன் பாட்டுக் கில்லை. ஒருமுறை தழுவியதும் உள்ளத்தில் படர்வதுதான் உயர்ந்த காதல் இருமுறை படிக்குமுன்பே இதயத்தில் ஏறுவதிக் கவிஞன் பாடல். திருமுறை என்பதெல்லாம் திருநீற்றுத் தமிழ்ப்பாடல்: இந்நாட் டார்க்கு நெறிமுறை என்பதெல்லாம் நிச்சயமாய் இவனெழுதி நிலைத்த பாடல். கவிஞர் முருகுசுந்தரம் 316