பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/336

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விருதுகள்/பரிசுகள் 1976- தமிழக அரசின் நல்லாசிரியர் விருது 1982- பனித்துளிகள் என்ற கவிதைத் தொகுப்புக்குத் தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் முதற்பரிசு 1982- ஈரோடு திருக்குறள் பேரவை மாநாட்டில் திருக்குறள் முனுசாமி பி.ஏ., பி.எல் அவர்களால் 'பாடடுச்சிற்பி என்ற பட்டம் வழங்கப்பட்டது. 1990 - தமிழக அரசின் 'பாரதிதாசன் விருது’ வழங்கப்பட்டது 1994- இருபதாம் நூற்றாண்டில் வெளியான சிறந்த தமிழ்க் காப்பியங்கள் பத்தில் இவருடைய பனித்துகள் என்ற காப்பியமும் ஒன்று எனக் கோயில்பட்டி திருக்குறள் பேரவை பாராட்டிப் பரிசு வழங்கியது. பாராட்டிப் பேசியவர் டாக்டர் சிலம்பொலி சு.செல்லப்பனார், 1994- கோவை இலக்கியப் பாசறை இவருடைய கவிதை நாடகமான எரிநட்சத்திரத்துக்குப் பரிசும், இவருக்குப் பாவேந்தர் விருது 94-ம் வழங்கிச் சிறப்பித்தது; பாராட்டி விருது வழங்கியவர் கவிக்கோ அப்துல்ரகுமான் 1999-சென்னை பாவேந்தர் பாசறை பாவேந்தர் பைந்தமிழ்ச் செல்வர் என்ற பட்டயம் வழங்கிச் சிறப்பித்தது. கவிஞர் முருகுசுந்தரம் 330