பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடிக்கடி சொல்கிறார்களே ! அதுவும் ஒரே கர்ப்பத்தில், ஆண்பெண்ணாக, இரட்டைக் குழந்தைகளைச், சுகப்பிரசவமாய் ! அதைத்தான் நம்மால் நம்ப முடியவில்லை. கண்ணகியின் சிலம்பும் காகுத்தன் பாதுகையும் சந்தித்தால்... பாதுகை: சிலம்பே ! பாதங்களின் சிருங்கார ரசமே ! எடுத்த அடிதோறும் இசைக்கும் வீணையே ! செம்பஞ்சு பூசிய சிற்றடிகளின் சிரிப்பே ! சிலிர்ப்பே ! கண்ணகியின் கால்நடையில் நீ ஒரு சிம்ஃபனியே நடத்திக் காட்டினாய். பகலில் உரக்கச் சிரித்த நீ படுக்கையறையில் மட்டும் ஏன் மெதுவாகச் சிரித்தாய்? கோவலனிடம் அச்சமா? முருகுசுந்தரம் கவிதைகள் 51