பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராமன் காட்டுக்குப் போக, தசரதன் இறக்க, பரதன் அரசைத் துறக்க, அப்போது எதிர்பாராமல் வீசிய புதிய அலை என்னை - அரியாசனத்தில் அமர்த்திவிட்டது. அரியாசனத்துக்கும் அலைக்கும் எப்போதும் தொடர்புண்டு. சிலம்பு: இந்த நாளில் ஐந்து ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சிப் பீடத்தில் அமர்ந்திருப்பதே பெரிய சாதனையாகக் கருதப்படுகிறது. நீ எப்படிப் பன்னிரண்டு ஆண்டுகள் அரசோச்சினாய்? பாதுகை: அன்று ஊழலுமில்லை; உடன்பிறவாச் சகோதரிகளுமில்லை. நாடுவிட்டு நாடு பணம் கடத்துவதைத் தடுக்கும் ஹவாலாச் சட்டமும் இல்லை. அதனால் பிழைத்தேன். 'கவிராத்திரி சன் டிவி தேதி : 1.0.3.97 முருகுசுந்தரம் கவிதைகள் 53