பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அந்தக் கைவிளக்கை ஏந்திழையார் கழகம் போராடிப் பெற்றது. 'வளையல்களின் கோரஸ்" வழக்குமன்றத்தையே குலுக்கிவிட்டது!’ கற்பழித்த காவலர்கள் காராக்கிரகத்தில் ! கண்ணிர் உலர்ந்த பத்மினி கல்யாண மேடையில் ! இது சிலம்பின் இரண்டாவது வெற்றி ! இலையுதிர் காலத்து ஏக்கங்கள்! சின்னவளே ! உன்னை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. உன்னை... புறவிதழைக் கிழித்துப் புறபபடட உனறன. புதுமொட்டு மேனியை... பிடிக்கும் போதெல்லாம் கைக்கு அடங்காமல் வரால் மீனைப்போல் வழுக்கித் துள்ளும் உன் வாலிபத்தை... சீண்டும் போது அடித் தொண்டையில் நீகிளப்பும் மாண்டலின் சிணுங்கலை... விட்டால் கவிஞர் முருகுகந்தரம்