பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரும் ஒரே நோய் அஜீரணக் கோளாறுதான். நல்ல இனம் என்று நம்பி வளர்த்தேன் ஆனால் இதற்கு ஒரு கெட்ட குணமுண்டு. இன்று சோறு போட்டவன் கடி என்று சொன்னால் நன்றி மறந்து நேற்றுச் சோறு போட்டவனைக் கூசாமல் கடித்துக் குதறிவிடும். நிலவின் ஆட்சி நிலவரசி! நீ கவிஞர்களின் காதலி காதலர்களின் கவிதை நீ ஒளியுலகின் ஆக்கினா சக்கரம். உன் ஆட்சியில் ஒளிவு மறைவென்பதில்லை எல்லாமே வெட்ட வெளிச்சம் தான். உன்னாட்சியில் வறட்சியும் இல்லை எப்போதும் குளிர்மழைதான் உன் பட்ஜெட்டில் எப்போதும் துண்டு விழுவதில்லை எவரும் பாதிக்கப்படுவதும் இல்லை. கட்டணம் ஏதுமில்லாமல் உலகம் முழுவதற்கும் இலவசமாக விளக்கேற்றுகிறாய். அதனால்தான் முருகுசுந்தரம் கவிதைகள் 63