பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Ο மறுபிறவியில் எனக்கு நம்பிக்கையில்லை. என்றாலும்ஒரு கவிஞன் தன் வாழ்நாளில் பல பிறவி எடுக்கிறான் என்பதை நான் நம்புகிறேன். O கவிதைக்குக் கூடப் பல பிறவிகள் உண்டு. ஜெர்மானியப் பெருங் கவிஞன் 'கெதே' பாஸ்து" என்ற தன் பெருங் காப்பியத்தை இருபது வயதில் தொடங்கிவிட்டான். தன் படைப்பைப் பலமுறை திருத்தித் திருத்தி எழுதி எண்பதாவது வயதில் முடித்தான். ஃபிட்ஜரால்டின் 'ருபாயியாத் மொழிபெயர்ப்பு மூன்று பிறப் பெடுத்தது. O பாரதிதாசனைப்போல் எழுதுவது தான் என் முதற்குறிக்கோள். சுரதாவின் புதிய உத்திகள் இளங் கவிஞனாகிய என்னைப் பெரிதும் வசீகரித்ததுண்டு. இன்று நான் நானாக எழுதுகிறேன். O கவிதை ஆற்றல் என்பது பொதுவானது. ஆற்றல் மிக்கவர்களே மரபுக் கவிதையிலும் strari - - - -