பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவளால் புன்சிரிப்போடு புறந்தள்ளப்பட்டு விட்டன: சாவு கூட அழகானதாகவும் ஆராதனைக்கு உரியதாகவும் கம்பீரமானதாகவும் எனக்குப் படுகிறது ' என்று வீணா தன்னை தன் நோக்கத்தைச் சொல்கிறாள்! 'சென்னையில் நடைபெறும் கிழக்காசிய நாடுகளின் கலாச்சார விழாவில் பங்கு கொள்ள வந்த இலங்கை அமைச்சர் திலகரத்னே நேற்று இரவு ஒன்பது மணிக்கு ஒரு வெடிகுண்டு விபத்தில் இறந்தார்... என்று வானொலி செய்தியை ஒலிபரப்புகிறது... ஆம்! 'வீனா - ஈழப் போராளிக் குழுவின் தற்கொலைப் படையைச் சேர்ந்தவள்! பல்கலைக் கழக வாழ்க்கை அவளுக்கொரு போர்வை வெடிகுண்டை மடியில் கட்டி வந்து வெடிக்கச் செய்தவளே அவள் தான்!' என்று நெடுமுடி என்னும் சி.பி.ஐ அதிகாரி அறிவிக்கிறான், ! நாடகத்தின் பெயர், காட்சிகள், பாத்திரங்களின் செயல் பாடுகள், வீணா எழுதிய 'விட்டில் பூச்சி குறியீட்டுக் கவிதை, இந்திய-இலங்கைப் பிரச்சனைகள், அதனால் இந்தியத் தமிழ் மண்ணில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு நிகழ்ச்சிகள். இப்படி நம் கருத்தில் ஒவ்வொன்றாய்ப் படமாக விரிகின்ற போது நாடகத்தின் முடிப்பு எப்படி இருக்கப் போகிறது என்று ஊகித்து விடமுடிகிறது... வீணாவின் எரிநட்சத்திர முடிவைப் படித்தவுடன் சிலருக்கு அதிர்ச்சி ஏற்படலாம்; சிலருக்கு ஏற்கெனவே தமிழ்நாட்டில் நிகழ்ந்த நிகழ்ச்சியின் மறுபதிப்புப் போன்றது தானே என்ற அலட்சியம் இருக்கலாம்... சமகாலத்து அரசியல்-சமுதாய வரலாற்று நிகழ்ச்சியை மிக எளிய தமிழில்-படிக்கவும் நடிக்கவுமான தமிழில்-கவிஞர் ஆக்கித் தந்த பிறகு, வாசகர்கள் சில விவாதங்களை எழுப்பிக் கொள்ளவேண்டும். விவாதிக்கவேண்டும். கவிஞர் முருகுசுந்தரம் 了8