பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எதிரியார் என்று தெளிவுபடுத்திக் கொள்ளாதது. இந்த ஐக்கியப்படுத்தலும், தெளிவு படுத்தலும் இருந்திருக்குமானால் இங்கே தமிழ்க்குருதியையும் இந்தியக் குருதியையும் சிந்த வைத்திருக்கமாட்டார்கள். நல்லவேளை முருகுசுந்தரம் படைத்த வீணா எதிரி யார் என்று தெளிவாகவே உணர்ந்திருக்கிறாள். எரிப்பதற்கான இடம் இந்தியாவாக-தமிழ்நாடாக இருந்துவிட்டது. வீணாவைப் பொறுத்தமட்டில் இது தவிர்க்க முடியாததே! ஆனால், 'யாரை?' என்பதில் 'iணா தெளிவாகவே இருந்திருக்கிறாள். இந்த 'எரிநட்சத்திரம் பற்றி எல்லோரும் விவாதிக்க வேண்டும், சற்று உரக்கவே விவாதிக்க வேண்டும், எதற்காக? -இனிமேலாவது பின்னடைவுகள் ஏற்படாமல் இருக்க வேண்டுமல்லவா அந்தப் போராட்டத்திற்கு, அதற்காக. சிவகங்கை 31-8-93 மீரா. கவிஞர் முருகுசுந்தரம் 8O