பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதுக்கவிதையிலும் வெற்றி பெறுகிறார்கள். O கவியரங்கம் சில காலம் என்னை ஆட் கொண்டது. இது ஆற்றல் மிக்க ஒர் அரங்கப்படை. புலவர்களின் சக்கர வியூகத்தைத் தகர்த்துப் பொதுமக்களைக் கவிதையின் பக்கம் இழுத்துச் சென்ற பெருமை இதனையே சாரும். 1968 முதல் 75 வரை கவியரங்கின் பொற்காலம். கலைவாணர் அரங்கம் நிரம்பிப் பிதுங்கும் அளவிற்குத் தரமான சுவைஞர்கள் கூடினர். பட்டி தொட்டியெல்லாம் புற்றீசல் போலப் பொதுமக்கள் கவியரங்கத்தில் மொய்த்தனர். ஆங்கில நாளேடுகள் - விரும்பித் தலையங்கம் எழுதும் அளவுக்குக் கவியரங்கம் விளம்பரம் பெற்றது. கவிஞர்களாகிய எங்களுக்குப் புகழ் மயக்கம் தரும் போதையாகவே இது மாறிவிட்டது. ஆனால்... தரமான கவிஞர்களின் உண்மையான வளர்ச்சி தடைப்பட்டது.

  1. The Muse of Tamilnadu-Indian Express.

முருகுசுந்தரம் கவிதைகள்