பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'பொருளாதாரத்தில் சோசலிசமும், அரசியலில் ஜனநாயகமும் A. மனித குலம் மேலும் புதிதாகப் பரிணமிப்ப தற்காகவே' பண்பாட்டுத் தளத்தில் மனித நேயம் பொங்கிப் பெருகுவதற்காகவே சோசலிசம் வேண்டும் என்கிறோம். எனவே பொங்கிப் பீறிடும் பண்பாட்டுப் பெரு வெள்ளமோ சரியான வடிகால் இன்றி கண்டபடி பாய்ந்து கொண்டிருக்கிறது . இவற்றைக் கரைகட்டி ஒழுங்கு படுத்தா விட்டால் அது காட்டாறாகக் கரைபுரண்டு பேரழிவினை விளைவிக்கும். இதை எல்லாப் பண்பாட்டு அமைப்புகளின் முன்னோடிகளும் உணரவேண்டும் என்று பொன்னீலன் தனது ஆழமான கருத்தை வலியுறுத்துகிறார், இந் நூலில் தொகுக்கப்பட்டுள்ள இரண்டு தலைப்புகளும், கருத்தரங்கு உரையாக இருந்தபோதிலும், இந்நூல் வாசகர்களுக்கு ஓர் ஆய்வு நூலாகப் பயன்படும் என்று எதிர்பார்க்கிறோம். பதிப்பகத்தார்,