பக்கம்:முற்றுறாச் சிந்தனைகள்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எங்களைச் சகித்தபடி - முதலாறடிக்கும் விளக்கத்தை நிறைக்கின்றார். விடுவந்தபின் சொன்னார், “முருகாற்றுப் படையிலும் ஏனோ மனம் செல்லுதில்லை வேறேதேன் பார்த்துவிட்டு முடியுமாயின் பின் பார்ப்போம்.” என்று நிறுத்திவிட்டார். திருவாசகப் பிழிவு கொடுத்த தித்திப்போ சங்கத் தமிழோடு நாம்போட்ட சண்டைகளோ, நக்கீரர் மொழியைவிட்டு ஐயாவை நகர்த்தியதால் 'முற்றுறாச் சிந்தனையில் முருகாற்றுப்படை முதலில். இதன்பின், "வள்ளுவர் சொன்ன ஆன்மிகக் கருத்துக்களை உங்கள் சிந்தனையில் உலவவிட்டால் என்ன? என்றோம். “முயலலாம்” என்று சொல்லிப் பலருரையைச் சேகரித்தார். 'கடவுள் வாழ்த்தைப் படிக்கச் சொல்லிவிட்டுப் பரிமேலழகர், பரிதியார், மணக்குடவர், பரிப்பெருமாள், காளிங்கர், சுகாத்தியர், இலக்குவனார், கவிராச பண்டிதர், கலைஞர், திரு.வி.க., சுப. அண்ணாமலை என உரைகாரர் தொகுத்தவெல்லாம், கேட்டு முடித்துவிட்டுப் புதிய வழிசமைத்து ஐயாவின் சிந்தனை விரைவுறத் தொடங்கியது. 'கடவுள் வாழ்த்தின் சிந்தனையை எழுதியாச்சு.