பக்கம்:முற்றுறாச் சிந்தனைகள்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xi 'வான் சிறப்பில் ஆன்மிகம் வடிவுகொண்டு சென்று ஒன்பதாம் குறளின் சொல்லொன்றில் நிலைபெற்றது. 'தானம் தவம் இரண்டும் தங்கா எனும் தொடரில் 'தவம்’ என்ற "சொல்” விரிவுகொள்ளத் தொடங்கியது. ‘தவம் பற்றிச் சொன்னதன்பின் வான்சிறப்பைக்கூட ஐயா நிறைக்கவில்லை. சேக்கிழார் மையத்தின் விழாப் புனைவு... திருமுறைகளை முற்றுறப் பதிக்கும் சுமை... அவற்றைப் படித்து முன்னுரை ஆராய்வுகள். போதாக்குறைக்கு, மாரடைப்பு நோயின் அறிகுறிகள் தலையெடுப்பு... பேஸ்மேக்கர் இணைப்பில் மருத்துவமனை விருந்தோம்பல்... என்றபடியாய்த் திருக்குறளும் நின்றுபோச்சு. திருவாசகத்தின் பின், திருக்குறள் செல்நெறி நிரம்பும் என நினைத்தோம் "முற்றுறாச் சிந்தனையில் இரண்டாவதாய் அதுவும், ஆன்றோரைச் சுரண்டிவிட்டு அப்படியே நிற்கிறது. 2002இன் நடு நாட்கள், ஐயாவின் உடல் வலிவை நோய் வலிமை வென்ற காலம். ஆனால், சிந்தனையத் தளர்வுறுத்த நோயாலும் முடியவில்லை. 'திருக்குறளைத் தொடரலாமா? - இது நான்.