பக்கம்:முற்றுறாச் சிந்தனைகள்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xiv டாக்டர் செருகிய முட்டுக் கட்டை'கள் சிந்தனைத் தேரைத் திசைதிருப்பி ஒட்ட, மூச்சுவாங்கலினுTடு பல்வேறு விளக்கமும் துளிகள் சேர்ந்த சாரல்கள் ஆயின. ஐயாகடிகாரம் ஒருமனி (1 c clock) சொன்னது; “போங்கள் சாப்பிட” என்று பணித்தார். இதன்பின்னும், முத்தநாதன், நினைத்த அப்பரிசே செய்ய' 'நிறைத்த செங்குருதிசோர. தறைப்படும் அளவு கால இடைவெளியதனில் மெய்ப்பொருளாரின் மனம், வாக்குக், காயம் மூன்றிலும் எழுந்து தணிந்த ஆன்மீக மாற்றங்கள் "புதிய கோணத்தில் தெரிகின்றன” என்றுவிட்டுப் "பின்பு எழுதலாம்” என்று முடித்தார். இடைச் செருகலாய் இவை ஏன் இங்கெனின், ஒன்பது வயதில் ஐயாவின் முதற்பொழிவு மெய்ப்பொருளார் பற்றியே சபையிற் சொரிந்ததாம். அதேநபர், அதே நாயனாரை எண்பத்தாறு வயதின் இறுதி வேளையிலும் புதிய கோணத்தில் சிந்திக்கிறார் என்றால்..... வயதோ, நோயோ சிந்தனைச் சோர்வைத் தரவில்லை என்பதற்கே. சம்பந்தப் பெருமானை விட்ட இடம்தொடர்வோம்..... அகன்று பரந்து ஆழமும் நீளமுமாய் நீண்டு நெடித்திருந்த பெரியபுராணச் சிந்தனையோ