பக்கம்:முற்றுறாச் சிந்தனைகள்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ΧΧV பாடல்களிலும், பத்தொன்பதிற்கும் மேலான இராகங் களிலும் வெளிப்படுகின்றது என்று விளக்கிப் பாடலில் நான்கு வகை ஞானமும் வைப்பு முறையில் மாறிக்கிடக்கின்றன என்று காட்டுவது அரிய விளக்கமாகும். பேராசிரியரின் இறுதிக்கால முற்றுப்பெறாச் சிந்தனைகளையும் திரட்டி ஒழுங்குபடுத்தி வெளி யிடும் அவர்தம் குடும்பத்தினரும் அவர்கள்மீது மிகுந்த பற்றுக்கொண்ட நண்பர்களும் பாராட்டுக்கும் தமிழ் உலகத்தின் நன்றிக்கும் உரியவர்கள். பேராசிரியர் அவர்களின் அறிவுரைகளாலும் ஆர்வவுரைகளாலும் வளர்ந்தவர்களுள் யானும் ஒருவன். அவருடைய இந்த நூலுக்கு அணிந்துரை எழுதும் வாய்ப்பு யான் பெற்ற பெரும்பேறு. இதனை வழங்கிய அவர்களின் குடும்பத்தினர்க்கும் நண்பர் களுக்கும் என் நன்றியினைத் தெரிவித்துக் கொள் கிறேன். பேராசிரியர் அ.ச.ஞாவின் புகழ் வாழ்க என்று இறைவனை இறைஞ்சுகிறேன். அன்பன் தெ. ஞானசுந்தரம் சென்னை - 600 101 31.10.2002