பக்கம்:முல்லைக்காடு, பாரதிதாசன்.pdf/32

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


மாமயலெனும் ஓர் அனலிடையே எனதுளம் நோயடைவதை
மாதிவளறி யான் இதைஎவர் போயவளிடமே புகலுவர்?
ஆம். அவள்தரு வாயிதழமு தேஇதுததி மாஅவுஷதம்!
ஆவியுனவ ளே உடைமைக ளாதியுமவ ளேயுலகினில்!

அற்புத சித்திர சிற்ப கலைக்கொரி
லக்கியம் வைத்தசி லப்புமி குத்திடும்
அழகாகிய வஞ்சியென் வீட்டை நண்ணாளோ?

காமுறுதமிழ் நாடெனுமொரு தாயுறுபுக ழோ!இனிதென
நாவலர்களு மேதுதிநிதம் ஓதிடுதமிழோ நவநிதி
யோ!முழுநில வோ!கதிரவ னோ!கவிதையி லேவருசுவை
யோ!இதுகன வோபுதுயுக மோ! வடிவழ கேவடிரசம்

மக்கள் உயிர்க்குறு நற்பதம் இப்படி
வைத்த தெனச்சொல விட்டசு கக்கடல்!
மனமே இனும்பொறு வீழ்ச்சி கொள்ளாதே!

 

31