பக்கம்:முல்லைக்காடு, பாரதிதாசன்.pdf/7

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கண்மாமலர் விரிந்திடும், பெண்கள்
கரம் கதவுகள் திறக்கும் — மிகக்

கருத்துடனவர் முன்றில் விளக்கக்
காற் சிலம்பொலி பறக்கும்!
உண்ணா துண்டு துயில் கிடந்திடும்
உயிர் நிகர்த்தகு ழந்தை — விரைந்

தோடித் தனது பாடம்படிக்க
உவகை கொண்டிடும் தந்தை.
விண்ணேறிடும் பகலவன் கதிர்!
விளங்குறும் திசை முகமே!— தகு

வினை தொடங்குது கிடுகிடுவென
விரி மனித ச முகமே!