பக்கம்:முல்லைக் கொல்லை.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 அந்த நேரத்தில். ஆடிக்கொண்டிருந்த ஒரு குச்சியிலி ருந்து நழுவிவிட்டது கருப்புத்துணி ஒன்று. அதுவும்கீழே விழவில்லை,. பறந்துசென்று பிரகாசாவின் மேலேயே விழுந்துவிட்டது. அவ்வளவுதான்! பிரகாசாவுக்கு கோபம் எல்லை மீறி புறப்பட்டு விட்டது. உடனே காரை நிறுத்தச் சொன்னார். காரிலிருந்து கீழே பாய்ந்தாராம்-கொடி காட்டிக் கொண் டிருந்தவர் ஒருவரின் கையிலிருந்த கம்பைப் பிடுங்கினார் ! சாலையோரத்தில் நின்று கொண்டிருந்தவர்களை-அங்கே போனவர் வந்தவர்களை அக் கம்பு கொண்டு தாக்க ஆரம் பித்து விட்டாராம் ! யார் ? தொடை தட்டி, மீசை முறுக்கி கோதாவில் இறங்கி விடும் சோதாப் பேர்வழியல்ல ! ஆனால் ......? அகிம்சா மூர்த்தியின் வார்சிலே வந்த வடக்கத்தி சீமான்-மனித மாணிக்கம் அனுப்பி வைத்த மகானுபாவர்- கலகலத்த காங்கிரஸ் கோட்டைக்குத் தூணாக வந்த கவர்னர் பெருமான்-மேன்மை தங்கிய பிரகாசா ! அவர்தான் இந்த 'வஸ்தாது' வேலையைச் செய்தாராம். செய்யலாமா அவர் ? மீண்டும் கேட்கிறேன் செய்ய லாமா அவர் இந்த சீர்கெட்ட செயலை ? இன்னும் கேளுங் கள், கையிலே கம்பேந்திய பிரகாசா நின்று கொண்டிருந் தோரை ஓட ஓட, துரத்தித் துரத்தி அடித்திருக்கிறாராம். ய