பக்கம்:முல்லைக் கொல்லை.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 திராவிடப் பிரிவினைக் கிளர்ச்சியை இகழ்கிறாயே, அதனுள் அடங்கியிருக்கும் உண்மைகளை நீ ஏன் அறிந்து கொள்ள முயற்சிக்கவில்லை. பூகோள புத்தகத்தை எடுத் துப்பார். ஒரே நாடாகவா உன் கண்களுக்குத்' தோன்று கிறது. எத்தனை எத்தனையோ எல்லைகள் இருக்கின்றன. ஒரே தலைவர்தானா இருக்கிறார்? இல்லையே!. எத்தெத்த னையோ எல்லைக் கோடுகள்! எண்ண முடியாத வரம்புகள்! வரப்பு மிகுந்தால்தர்ன் நாடு செழிக்கும். சொன் ஆகவேதான் சொல்லுகிறோம் - பலமுறை னோம்- இனியும் சொல்வோம் - உன்னுடைய “ஐக்கிய" சுலோகம் ஆதாரமற்றது - அறிவுக்குப் புறம்பானது என்று ! இதை நீ உணர மறுக்கிறாய் - உணரும் பண்பு உன் னிடம் இல்லாத காரணத்தால் ! இந்த இடத்திலே முதல் மாநில மாநாட்டிலே அறிஞர் அண். அவர்கள் குறிப்பிட்டதை நினைவுபடுத்த விரும்பு கிறேன், இந்த நாட்டின் உண்மையான கம்யூனிஸ்ட் கட்சி திராவிட முன்னேற்றக் கழகம்தான் ! அது எதிர்ப்பை எள்ளி நகையாடி - ஏச்சுக்களை தூசாக மதித்து தாயகத்தை மீட்கும் பெரும் பணியிலே இறங்கியிருக் கிறது. நேருப் பண்டிதரின் சமீப காலத்திய பேச்சுகள், நமது அப்பணியின் வெற்றி அருகில் நெருங்கிவிட்டது என் பதைத்தான் எடுத்துக் காட்டுகிறது.