கூஅ முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை பிட்டுப் பாடவந்தமையால், இம் முல்லைப்பாட்டிற்குத் தலைவன்பெயர் எழுதப்பட வில்லையாயினும், இதற்கும் உள்ளோன் ஒருதலைவன் உண்டென்பது துணியப்படும். இம் முல்லைப்பாட்டை அடுத்திருக்கின்ற மதுரைக் காஞ்சியும் நெடுநல்வாடையும் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைப் பாட் டுடைத் தலைவனாகக் கொண்டு விளங்கலால், அவற்றை அடுத்திருக்கின்ற இதுவும் அவனையே பாட்டுடைத்தலை வனாகக் கொண்டு செய்யப்பட்டிருக்கலா மென்பது கரு தப்படும். பாண்டியன் நெடுஞ்செழியன் தலையாலங் கானம் என்னும் இடத்தில் தன்னைப் பகைத்து எதிர்ந்த சேரன் சோழன் திதியன் எழினி எருமையூரன் இருங்கோவேண்மான் பொருநன் என்னும் அரசர் எழுவரொடும் போர்புரிதற்பொருட்டுச் சென்றபோது, அவன்றன்மனைவி கொழுநன் பிரிந்த துயரத்தை ஆற்றிக் கொண்டிருந்த அருமையும், அவன் அவ்வரசரை யெல் லாம் வென்று தான்சொன்னவண்ணங் கார்காலத் துவக் கத்தில் மீண்டுவந்தமையுங் கண்டு நப்பூதனார் இதனைப் பாடினாரென்பது புலப்படும். இவ்வாறே நெடுநல்வா டையிலும் ஆசிரியர்நக்கீரனார், நெடுஞ்செழியன் மனை வி அவனைப்பிரிந்து வருந்திய துன்பத்தினை விரித்துச், "செம்முகச் செவிலியர் கைம்மிகக் குழீ இக் குறியவும் நெடியவும் உரைபல பயிற்றி இன்னே வருகுவர் இன்துணையோரென முகத்தவைமொழியவும் ஒல்லாள் மிகக்கலுழ்ந்து உரோகிணி நினைவனள் நோக்கி நெடிதுயிரா மாயிதழ் ஏந்திய மலிந்து வீழ் அரிப்பனி
பக்கம்:முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை.pdf/56
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/3/32/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88.pdf/page56-752px-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88.pdf.jpg)