பக்கம்:முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரு0 முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை இடைப்பெண், புல்மேயப்போன தாய் இன்னும் வரா மையாற் சுழன்று சுழன்று வருந்துகின்ற ஆன்கன்று களைப் பார்த்து நீங்கள் வருந்தாதீர்கள், நுஙகள் தாய் மார் கோவலரால் ஒட்டப்பட்டு இப்பொழுதே வந்து விடுவர்' என்று சொல்லிய நற்சொல்லை அம் முதுபெண் டிர் கேட்டு வந்து, "அன்னாய்! யாங்கள் கேட்டுவநத இந் நற்சொல்லானும், நின் காதலன் போகுந் தறுவாயில் அவன் படைமறவர் பாக்கத்திலே கேட்டுவந்த நற்சொல் லானும் நின் தலைவன் தான் எடுத்துச் சென்ற போர் வினையைக் கடுக முடித்து இப்போதே வந்துவிடுவன் என்று துணிகின்றோம்; ஆதலால் மாயோய்! நீ வருந்தா தே" என்று அம் முதுபெண்டிர் பலகாலும் வற்புறுத்தி ஆற்றுவிக்கவும் ஆற்றாமல் தன் கண்களில் நீர் முத்துப் போல் இடையறுந்து துளிப்பத் தலைமகள் மிகவும் வருந்து கின்றாள். உச-முதல் எஅ - அடிவரையிற், பாட்டின் பொருட்காட்சி தலைமகன் பாசறையி லிருக்கும் இருப்புக்குமாறுகின்றது; உஉ - முதல் உஅ.வரையிற் பாசறையின் அமைப்பு இனி, வேனிற்காலத் துவக்கத்திற் பகைமேற் சென்ற தலைவன், பகைவர் தம் நகரத்திற்குக் காவலாக அமைத்த அகன்ற பெரிய காட்டிலுள்ள பிடவஞ் செடி களையும் பகிய தூறுகளையும் வெட்டி, வேட்டுவர் அரண் களையும் அழித்து, முட்களை மதிலாக வளைத்துக் கட லைப்போல் அகலமான பாடி வீடு அமைத்தமை சொல் லப்படுகின்றது.