பக்கம்:முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட்பாகுபாடு உரு-முதல் எகூ - வரையிற், பாடி வீட்டினுள் அமைதிகளுக், தலைமகனுடைய உடம்புநிலை உள்ள நிலைகளும் மிக நுணுக்கமாக எடுத்துச் சொல்லப்படுகின்றன வீட்டி இனி, இங்ஙனம் அமைக்கப்பட்ட பாபு னுள்ளே தழைகள் மேல்வேய்ந்த கூரைகள் ஒழுங்காக இருக்கு5 தெருவில் நாற்சந்தி கூடும் முற்றத்திலே காள லாக நின்ற யானை கரும்பொடு நெருங்கக் கட்டிய நெற கதிர்களையும் அதிமதுரத் தழைகளையும் உண்ணாமல், அவற்றினால் நெற்றியைத் துடைத்துக்கொண்டுங், கொம் பிலே தொங்கவிட்ட தும்பிக்கையில் அவற்றைப் பற்றிக் கொண்டும் நிற்றலால் அவ் யானைப்பாகர் தோட்டியாற குத்தியும் வடசொற்களால் ஆதட்டியுங் கவளம் ஊட்டு கின்றார்கள். இனி, அப்பாடி வீட்டினுட் பல்வகைப் படைக் ளும் இருப்பதற்கு அமைக்கப்பட்ட அரண்களையும் அவ் வரண்களுக்கு இடையில் தலை மகனுக்கு ஒரு தனிவீடு சமைக்கப்பட்டமையுங் கூறுகின்றார்.வவியவில்லை நிலத் திற் சுற்றிலும் ஊன்றி, அம்புப் புட்டிலை அதில் தொங்க விட்டுப், பின் அவ்விற்களையெல்லாங் கயிற்றால் தொடுத் துக்கட்டி வளைத்துச்செய்த இருக்கையில், நீண்ட குந் தங்கோல்களை ஊன்றி அவற்றொடு படல்களை நிரைத்து வளைத்துச் செய்த வில்லரணங்களே சுற்றுக் காவலாக, அவற்றின்கண் உள்ள பலவேறு படைகளின் நடுவிலே, தலைவனுக்கென்று பலகிற முடைய மதில்திரையை வளைத் துச்செய்த வீட்டின் அமைப்புக் கூறினார். அதன் பின் அங்ஙனம் வகுக்கப்பட்ட தலைமகனிருக்கையில் அழகிய மங்கைப் பருவத் திளைய பெண்கள் கச்சிலே கட்டப்