பக்கம்:முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எச முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை கூறிற்று; இனிப் பாடிவீட்டின்கண் எல்லாருந் தொழி லவிதற்குத் தெரிகுறியாக அடித்துவிட்ட மணி யென்று ரைப்பினும் அமையும். 'பூத்த ஆடு அதிரற்கொடி' எனச சொற்களை மாறிக்கூட்டுக. படாா- சிறுதூறு சிதர்-திவலை. துகில் முடித்துப் போர்த்து - கூறையால் மயிரை முடித்து உடம்பையும் போர்த்துக்கொண்ட; இச் சொற்றொடர் மெய்காப்பாளர்க்கு அடையாய்நின்றது; "மீப்பால் வெண் டுகில் போர்க்குநர் பூபபால், வெண்டுகில சூழ்ப்பக் குழன் முறுக்குநர்" என்னும் பரிபாடற் பத்தாஞ் செய்யுளடி கள் ஈண்டு ஒப்பிடற் பாலன. ஓங்குநடைப் பெருமுதா ளர் - உயர்நத நல் லொழுக்கத்தினை யுடைய மெய்காப்பா ளர்; தம் மரசர்க்குப் பகையாவார் செய்யுங் கீழறுத்தல் களுக்கு இடங்கொடாது தம்மரசர்மாட்டு மெய்யொழுக்க முடையராதல் பற்றி 'ஒங்குநடை' யுடையரெனச கிறந் தெடுத்துக் கூறினார்; 'பெருமூதாளர்' என்பது பெரிது முதிர்ந்த காவலாளர் எனப் பொருடருதலின், எனைக் காவற் றொழிலிலெல்லாங் கடமை வழாது மெய்ப்பட ஒழுகி முதிர்ந்தார் தம்மையே பின்னர் மெய்காப்பாள ராக வைப்பரென்பதூஉம் பெற்றாம். (ருரு - ரு அ ) பொழுதினை இத்துணையென்று வரம் பருத்து உணரும்பொழுதறி மாக்கள், அரசனைத்தொழு து கொண்டே காணுங் கையினராய், விளங்க வாழ்த்தி நிலவுலகத்தை வென்று கைப்பற்றுதற்குச் செல்வோனே நினது கடாரத்திலே இட்ட சிறிய நீருள்ள நாழிகைவட் டிலிற் சென்ற நாழிகை இவ்வளவு' என்று சொல்ல வென்க. தம்மரசர்க்குப் பகைவரானோர் செய்யுங் கீழறுத்த லுக்கு வயமாகிப் பொழுதினைப் பொய்த்துக் கூறுவார்.